web log free
April 21, 2025

ரணில் - சஜித் இணைவு கதை உண்மையா?

சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித உடன்பாடும் ஏற்படத் தயாராக இல்லை என சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணையவுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த வதந்தி ஆளும் கட்சியின் குழுவினால் பரப்பப்படுவதாகவும், சஜித் பிரேமதாசவின் நிச்சயமான வெற்றியைக் கண்டு தேசிய மக்கள் சக்தியும் அந்தக் கதைகளை பரப்பி வருவதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, அவ்வாறானதொன்று நடக்காது என்பதை உறுதிப்படுத்துவதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd