web log free
June 06, 2025

ரணில் கடும் எச்சரிக்கை!

இம்முறை ஜனாதிபதித் தேர்லில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது. மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு விலகிச் செல்லுமாறு ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் பெயருக்கு இருந்து கொண்டு, தேர்தல் பணிகளை குழப்பி வந்த நான்கு அமைச்சர், பிரதியமைச்சர்களை பதவி விலக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு பலர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது உள்ளே இருந்து செயல்படுவோரை உடனடியாக வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காமல் மக்களுக்கான பணிகளுக்கு சிலர் முட்டுக்கட்டையாக இருந்த நிலையில் பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரை ஜனாதிபதி நேற்று பதவி நீக்கியிருந்தார்.

இந்த நிலையில், பதவி நீக்கப்பட்ட நால்வர் உள்ளிட்ட சிலர் இணைந்து மொட்டுக் கட்சி அலுவலகத்தில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தத் தயாராகி வருவதாக அந்தக் கட்சித் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd