web log free
July 02, 2025

வாக்காளர் அட்டை விநியோக பணி இன்றுடன் முடிவடைகிறது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்றுடன் நிறைவுபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 80 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அருகாமையிலுள்ள தபால் அலுவலகங்களில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Last modified on Saturday, 14 September 2024 03:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd