web log free
November 07, 2025

பொதுத் தேர்தல் குறித்து ஐதேக முக்கிய முடிவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவது தொடர்பில் மூன்று யோசனைகள் செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

சமகி ஜனபல கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவது, யானை சின்னத்தில் போட்டியிடுவது என மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சஜபாவுடன் இணைவது தொடர்பாக ருவன் விஜயவர்தன நடத்திய கலந்துரையாடலைத் தொடருமாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நவீன் திஸாநாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் ஆஷு மாரசிங்க ஆகியோரும் அந்த யோசனைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சஜபய இரண்டு முறை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருப்பதால், இம்முறையும் தோற்கடிக்கப்படலாம் என வஜிர அபேவர்தன மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட போதிலும், பொதுத் தேர்தலில் அது தொடர்பான தொழிநுட்ப சிக்கல்கள் காணப்படுவதாக செயற்குழு குறிப்பிட்டுள்ளது.

செயற்குழுக் கூட்டம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்று சுமார் 5.30 மணிவரை இடம்பெற்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd