web log free
October 23, 2024

வீடுகளை கையளிக்க மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்களினால் 14 உத்தியோகபூர்வ வீடுகளே கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 41 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த உடனேயே இந்த வீடுகளை மீள வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தது.

தொடர்ந்தும் குறித்த குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.