web log free
October 23, 2024

இலங்கையில் தற்கொலை அதிகரிக்க காரணம் என்ன?

இலங்கையில் தினமும் 08 பேர் தற்கொலை செய்து கொள்வதாக இலங்கை மனநல மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்கொலை வீதம் மிக அதிகமாக இருப்பதாகவும் உலகில் 21 ஆவது இடத்தில் இருப்பதாகவும் அதன் தலைவர், விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சஜீவன வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக தற்கொலை வீதம் அதே மட்டத்தில் காணப்படுவதாகவும், மனச்சோர்வு, மன உளைச்சல், ஆளுமைப் பிரச்சினைகள் போன்றன இதற்குக் காரணம் எனவும் கலாநிதி வீரசிங்க வலியுறுத்துகிறார்.