web log free
October 20, 2025

இன்று தபால் மூல வாக்களிப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுகிறது. இதில் வாக்களிப்பதற்கு 1576 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இன்றைய தினம் வாக்களிக்க தவறுவோருக்கென எதிர்வரும் 18ம் திகதி சந்தர்ப்பம் வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயாதீன குழு எல்பிட்டிய பிரதேச சபைக்கென வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. குறித்த சபைக்கான தேர்தல் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd