web log free
December 05, 2025

கொழும்பில் 35 வயது நபர் சுட்டுக் கொலை

கொழும்பு - கிரேண்ட்பாஸ் மாதம்பிட்டி மயானத்திற்கருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியின் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் மீது காரில் வந்த சந்தேகநபர்களால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிஜய செவண குடியிருப்பு தொகுதியில் வசித்துவந்த 35 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd