web log free
January 24, 2026

ஈஸ்டர் தாக்குதல் - கம்மன்பிலவின் தாளத்திற்கு ஆட முடியாது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளை வெளியிடத் தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தனிநபரின் அறிக்கைகளின் அடிப்படையில் அவை ஏன் வெளியிடப்படுவதில்லை என்று கேட்ட அவர், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பணிகளைச் சரியாகச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.உதய கம்மன்பில சிறு பிள்ளைகள் மைதானத்தில் விளையாட்டுப் பொருட்களை வீசி கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்படுவதாகவும், அவரின் அறிக்கைகள் தொடர்பில் தாம் கவலைப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd