web log free
April 21, 2025

ரோஹத்தவின் மருமகனுக்கு நேர்ந்த கதி

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் என கூறப்படும் கண்டி பிரதான வீதியிலுள்ள கார் விற்பனை நிலைய உரிமையாளரின் மகனின் வீட்டில் இருந்து பதிவு செய்யப்படாத நவீன கார் மற்றும் ஜீப் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1997 என்ற இலக்கத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், வாகனங்கள் தொடர்பான சட்டப்பூர்வ ஆவணங்கள் எதையும் குடியிருப்பாளர்கள் சமர்ப்பிக்கத் தவறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்த போலீசார், இரு கார்களையும் கைப்பற்றினர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சரின் மருமகன் என கூறப்படும் கயான் சேரம் சட்டத்தரணி ஒருவருடன் நேற்று (21) பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளிக்க வந்ததாக அவர் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd