web log free
October 23, 2024

ரணில் மீது பாயும் சட்டம்

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு சோசலிச வாலிபர் சங்கம் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி கலைத்தமைக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பு சார்பில் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.