web log free
December 16, 2025

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு அலுவலகங்கள், சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் போலவே பொதுமக்களையும் பாதுகாக்க, நாட்டின் முப்படைகளும், காவல்துறையும் பலப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து இனங்களின் கலாசாரத்துடன் செயற்படக்கூடிய ஒரே அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனவும் நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முகமாக இன்று ஹட்டனில் உள்ள தனியார் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd