web log free
September 09, 2025

வாக்காளர் அட்டை விநியோகிக்க இன்று விசேட தினம்

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 2,090 தபால் அலுவலகங்கள் நாளை(03) திறக்கப்பட்டிருக்குமென சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்தார்.

விநியோகப் பணிகளில் 8,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd