web log free
January 11, 2026

அநுரவுக்கே இல்லாத பாதுகாப்பு மஹிந்தவுக்கு எதற்கு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக சிலர் முறைப்பாடு செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அநுர திசாநாயக்கவினால் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களையும், குறைந்த எண்ணிக்கையிலான மெய்ப்பாதுகாவலர்களையும் அழைத்துச் செல்ல முடியுமானால், மஹிந்த ராஜபக்ஷ ஏன் அவ்வாறு செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd