web log free
February 05, 2026

சஜித் எதிர்க்கட்சித் தலைமையை இழந்தார், ரணில் பாராளுமன்றத்திற்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு மேலும் பல சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் ஆதரவளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க சித்தாந்த சவாலை முன்வைக்க முடியாது என அந்த எம்.பி.க்கள் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருதுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அந்த நிலைமையின் அடிப்படையில் அவர்களில் ஒரு குழு ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்க்கட்சித் தலைமையின் கீழ் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலுக்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்துக்காக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd