web log free
February 09, 2026

மீண்டும் ட்ரோன் கேமராக்கள் கண்காணிப்பில்

போக்குவரத்தை கண்காணிக்க மீண்டும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd