web log free
January 09, 2026

மஹிந்தவின் பாதுகாப்புக்கு இவ்வளவு செலவா?

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 1.1 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அதிகளவான பங்கு ஒதுக்கப்பட்டது. ஆண்டுக்கு 326 மில்லியன் ரூபாவாகும்.  

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆகக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது குறிப்பிட்ட குழுவினால் அவ்வப்போது பரிசீலனை செய்யப்படும்.

மேலும், மகிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்கள், விரிவான பாதுகாப்பு ஏற்பாட்டை உறுதி செய்யும் வகையில், ஆயுதப்படையைச் சேர்ந்த பணியாளர்களையும் உள்ளடக்க முடிவு செயப்பட்டுள்ளது.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd