பாராளுமன்ற ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவை வழங்குவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்ற ஊழியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமானால் அது மோசமான முன்னுதாரணமாக அமையும் என பொருளாதார ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பணியாற்றும் சுமார் 1200 பணியாளர்கள் இந்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.
பாராளுமன்ற ஊழியர் குழுவொன்றும் அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் இந்த கொடுப்பனவை வழங்குமாறு கடந்த நாட்களில் கோரிக்கை விடுத்திருந்தது.