web log free
July 09, 2025

மீண்டும் போனஸ் கேட்கும் மின்சார சபை ஊழியர்கள்

2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் தொகையை விரைவில் வழங்குமாறு தேசிய ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

2024ஆம் ஆண்டுடன் தொடர்புடைய பல அரச நிறுவனங்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளதால், மின்சார ஊழியர்களும் அதனைப் பெற வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பாட்டுள்ளது. 

எவ்வாறாயினும், மக்களுக்கு மின்சார கட்டண நிவாரணம் கிடைக்காததன் பின்னணியில், மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை என அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd