பாடசாலை தொடங்கும் வேளையில் மாணவர்களுக்கு சுவாச நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு வைரஸ் வகைகளைச் சேர்ந்த சுவாச நோய்கள் பரவுவதுடன் மாணவர்களின் சுகாதார நிலை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சாந்த டி சில்வா தெரிவித்தார்.