web log free
March 16, 2026

இடைநடுவில் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மீள ஆரம்பம்

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதன் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தனிநபருக்கும் வீட்டு உரிமையை வழங்குவதாகும்.

இதன்படி, முன்னுரிமை அடிப்படையில் உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, ​​வசதியான வீட்டு உரிமை இல்லாத கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 65,000 பேர் கொழும்பு நகர எல்லையில் வசிப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளை உள்ளடக்கி வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

அந்த நோக்கத்திற்காக, மக்கள்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd