web log free
May 12, 2026

அரிசிக்கு மீண்டும் கட்டுப்பாட்டு விலை!

நெல்லுக்கு உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரிசியின் விலை சுமார் ரூ.230-240 ஆக உள்ளது, இதை மேலும் அதிகரிக்க முடியாது என்று கூறிய அமைச்சர் சமரசிங்க, விவசாயிகள் தங்கள் நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நெல் மற்றும் அரிசி ஆகிய இரண்டு தேவைகளையும் கருத்தில் கொண்டு, அவற்றுக்கான விலைகளை வர்த்தமானியில் வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd