web log free
February 08, 2026

எதிர்காலத்தை நோக்கியே இலங்கை பயணம் - ஜனாதிபதி

கடந்த காலத்தை பற்றி சிந்திக்காமல் எதிர்காலத்தை நோக்கியே இலங்கை இந்த வருட சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,  

நவீன ஐக்கிய தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற வடக்கிலும் தெற்கிலும் உள்ள அனைத்து இலங்கையர்களின் கூட்டு எதிர்பார்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

 "ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பயணம் முன்னோக்கி உள்ளது, ஒரு கூட்டுப் பயணம் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது,

அதே நேரத்தில் ஒரு நவீன குடிமகனாக வாழ்வதற்கான சுதந்திரத்தை வளர்க்கிறது" என்று ஜனாதிபதி திசாநாயக்க கூறினார்.

 உலகளாவிய பொருளாதாரத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் பொருளாதார சுதந்திரத்தை அடைவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார், கூட்டு தேசிய முயற்சிக்கு அழைப்பு விடுத்தார்.  "பொருளாதார சுதந்திரத்தை அடைய, நாம் அனைவரும் ஒன்றாக நம்மை அர்ப்பணிக்க வேண்டும்," என மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd