web log free
March 28, 2026

நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கும்பல் தலைவரான கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் நபர் இன்று (19) புத்தளம் பாலவிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் முகமது அஸ்மான் ஷெரிப்தீன், வயது 34.

அவர் ராணுவத்தில் முன்னாள் லெப்டினன்ட் ஆவார். கடந்த சில வருடங்களாக சீதுவ மற்றும் கல்கிஸ்ஸை காவல் பிரிவுகளில் ஏழு கொலைகளைச் செய்த நபர் இவர் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் சொகுசு வேனில் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd