web log free
June 04, 2025

தேர்தல் தொடர்பில் இ.தொ.கா விளக்கம்

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்(2025) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கான தேர்வுகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், ஒரு சிலரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தனித்தீர்மானம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தான் உட்பட இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர்களால் இணைந்து எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமையவே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயார்படுத்தப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

ஆகவே எந்த ஒரு நபரும் தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாமென கட்சியின் உயர்பீடம் கேட்டுக்கொண்டுள்ள அதே வேலையில், இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி பெயர்பட்டியல் வெளியிடப்படும் என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd