web log free
February 08, 2026

ஜப்பான் 590 மில்லியன் ரூபா நிதியுதவி

ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தின் தீயணைப்புப் பிரிவினை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் 590 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது.

நாட்டிலுள்ள 14 ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களில் உள்ள 285 நிறுவனங்களில் 145,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

குறித்த முதலீட்டு வலயங்களுக்காக முதலீட்டு சபையின் ஊடாக உபகரணங்களை வழங்குதல் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd