web log free
January 01, 2026

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வாய்திறக்க வேண்டாம் - பிரதமர்

எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் நிலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதனைக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd