web log free
August 24, 2025

இலங்கையில் மனித உரிமை குறித்து அமெரிக்கா அதிருப்தி!

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கைக்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதோ அல்லது 1988-89 மார்க்சிச கிளர்ச்சியின் போதோ இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை துஸ்பிரயோகங்களை விசாரிப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை.

இதன்படி, 2024ஆம் ஆண்டில் அரசாங்கமோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத கொலைகளை புரிந்தமை தொடர்பான பல அறிக்கைகள் வெளியானதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd