web log free
February 07, 2026

ரணிலிடம் CID மீண்டும் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணைக்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏகநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் இந்த விவகாரம் குறித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

ரணில் விக்ரமசிங்க நியூயார்க்கிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Last modified on Wednesday, 20 August 2025 03:12
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd