web log free
September 16, 2025

சகலரும் ஆசனப்பட்டி கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும்  சகலரும் ஆசனப்பட்டி அணிவது நேற்று முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது ஆசனப்பட்டி இல்லாது சில வாகனங்கள் காணப்படுவதால் அத்தகைய வாகனங்களுக்கு ஆசனப்பட்டியை பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் ஒரு அம்சமாகவே, இந்த ஆசனப்பட்டி அணிவது நேற்று முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd