web log free
September 15, 2025

நிமல் லான்சா பிணையில் விடுதலை

2006 ஆம் ஆண்டு தாக்குதல் உட்பட பல குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (08) நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் ரூ. 020,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஆகஸ்ட் 29 ஆம் திகதி கொச்சிக்கடை காவல்துறையிடம் சரணடைந்தார், அங்கு அவர் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு தலைமை நீதவான் ரகிதா அபேசிங்கே முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd