web log free
June 20, 2026

நிதி மோசடி தொடர்பில் மைத்திரியிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

சுமார் ஐந்து மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர், மதியம் 2.00 மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலமளிக்கவே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd