web log free
September 19, 2024

ஜனாதிபதிக்கு எதிராக மனு தாக்கல்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில், இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, ஆறுவருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞானசார தேரர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.