web log free
September 19, 2024

'உண்மையை மூடி மறைக்கின்றனர்'

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரசாங்கம் உண்மையை மூடி மறைப்பதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கத்துக்கு பாரிய பொறுப்புள்ளது என்று தெரிவித்துள்ள அவர், சம்பவம் குறித்து ஆராய பல குழுக்களை நியமிக்கப்பட்டாலும் இதில், ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்​கொள்வதாக கூறியுள்ளார்.

இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலை அறிவித்திருந்தால், சகல தேவாலயங்களை மூட நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.