web log free
December 15, 2025

முஸ்ஸமில்லின் உறவினருக்குப் பிணை

மேல் மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸ்ஸமிலின் உறவினர் ஒருவர், கொழும்பு ​மேல் நீதிமன்ற நீதவான் தனுஜா ஜயதுங்கவினால், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1000 கைக்குண்டுகளை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளிலேயே அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் கைதுசெய்யப்பட்ட கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd