web log free
December 02, 2023

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

இலங்கையில் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இந்த வர்த்தமானி இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால வேலைநிறுத்த போராட்டத்தில் ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் ஈடுபடவுள்ள நிலையில் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.