நாட்டில் தற்போதைய அனைத்து துறைகளும் எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் பல பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தால் எதிர்காலத்தில் மதுபானங்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்படலாம் என்ற கருத்துக்கள் சமூகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மதுபான உற்பத்தியாளர்கள் தெரிவிப்பதாவது, எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் மதுபான விலையை உயர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாலும், விலையை அதிகரித்தால் தற்போது நிலவும் விற்பனைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகும்.
எனவே, இதுவரை மதுபான விலை உயர்வு குறித்து எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




