web log free
September 15, 2025

'மரண தண்டனை குறித்து கலந்துரையாடப்படும்'

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை, ஜனாதிபதி மற்றும் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொனகராலை மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உயிரைக் கொல்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது என்பதால் மரண தண்டனையை நிறைவேற்றும் யோசனைக்கு ஆதரவளிக்க முடியாதென்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd