1971 மற்றும் 1988–89 காலகட்டங்களில் நாட்டின் முன்னேற்றமான மனிதவளமே அழிக்கப்பட்டதாகவும், அதில் இருந்து உயிர் தப்பிய திறமையான மனிதவளம் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்ததாகவும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் திறமையான மனிதவள பற்றாக்குறை நிலவுகிறது என்றும், ஒரு நிறுவனத்தின் தலைவராக (Chairman) பதவியேற்க தகுதியான ஒருவரை கண்டுபிடிப்பதும் கடினமாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எப்படியாவது ஒருவரை அந்த பதவிக்கு நியமித்தாலும், குறுகிய காலத்திற்குள் அவர் நிலைதடுமாறும் சூழ்நிலையும் உருவாகிறது என்றும், இதனால் தற்போது மனிதவளத்தை மேம்படுத்திக்கொண்டே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




