web log free
November 04, 2025

'யாராலும் கோட்டாபயவை தோற்கடிக்க முடியாது'

யார் வந்தாலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை தோற்கடிக்க முடியாது என, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்துவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சில தரப்பினர் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, அமெரிக்காவுக்கு சென்று அங்கு வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd