பௌத்த தர்மத்தைச் சிதைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கருத்தை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கடுமையாக விமர்சித்துள்ளது.
1987-89 காலப்பகுதியில் ஜே.வி.பி (JVP) நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் போது பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சி இதுவரை பொறுப்பு கூறவில்லை என ஐ.தே.க சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வரலாற்றிற்குத் தீர்வு காணாமல், பௌத்த துறவிகள் தொடர்பான சீர்திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கத்திற்கு என்ன தார்மீக உரிமை உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.


