web log free
June 01, 2026

தன்சலுக்குள் வாகனம்: 3 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலி!

ஹோமாகம, மீகொட பகுதியில் அமைக்கப்படிருந்த 'தன்சல்' (தானப் பந்தல்) ஒன்றுக்குள் கேப் ரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் அடங்குவர்.

விபத்தை ஏற்படுத்திய கேப் வாகனத்தின் ஓட்டுநர், விபத்து இடம்பெற்ற வேளையில் மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் நிலையில், அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd