web log free
September 19, 2024

ஆணைக்குழுவின் அறிக்கை கையளிப்பு

ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குறித்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்னவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

கடந்த 2018 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.