web log free
May 09, 2025

பூஜித், ஹேமசிறி விளக்கமறியல் நீடிப்பு


கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் 9ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து அவர்கள் ருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் அவர்கள் இருவரையும் நேற்று (02) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்தது.

எனினும், சுகயீனமுற்ற நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd