web log free
July 12, 2025

மைத்திரியின் மன்னிப்புக்கு சவால் மனு

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்றத்தில், நேற்று (10) ஆராயப்பட்ட போதே, மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd