web log free
July 04, 2025

'சரியாக தீர்மானித்திருந்தால் வெற்றி நிச்சயம்'


எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சரியான தீர்மானமொன்றை எடுத்திருந்தால், மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப்பெற்றிருக்கும் என, அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd