web log free
September 18, 2025

மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்பமை உரிமை மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை 7 நீதியரசர்கள் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை காரணமாக அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd