web log free
September 26, 2023

தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 09 பேரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஹெரோயின் போதைபொருள் 60 கிலோகிராமுடன் 09 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காலி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகு ஒன்றை சோதனையிட்ட போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், குறித்த படகில் இருந்த 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடடத்தக்கது.