web log free
May 10, 2025

பதவியேற்பு தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை

பதவிகளை ராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்கும் தினம் தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானத்துக்கும் வரவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இணைந்து பிரதமருடன் கலந்துரையாடி அதற்கான தினத்தினை தெரிவித்து செய்வார்கள் என, தான் எதிர்பார்ப்பதாகவும் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மீண்டும் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுக்கொள்வது தொடர்பான ரிஷாட் பதியுதீனின் தனிப்பட்ட கருத்து தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

எவ்வாறயினும், பதவிகளை ராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்பதாகவே முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd