web log free
September 20, 2024

வான்கதவுகள் திறப்பு

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இரண்டு திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, களனி கங்கைக்கு அண்மித்த கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் தமது தேவைகளுக்காக களனி கங்கையின் நீரினை பயன்படுத்தும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.